//]]>3

புதன், 25 ஏப்ரல், 2012

மீண்டும் இணைகிறார் மலிங்கா



இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இண்டியன்ஸ் அணியின் முக்கிய வீரருமான லசித் மலிங்கா காயம் காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார்
ஐந்தாவது ஐ.பி.எல் தொடரில் கடந்த ஏப்ரல் 11ம் திகதி ராஜஸ்தான் றொயல்ஸ் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியின் பின்பு காயமடைந்ததன் காரணமாக மலிங்கா எந்தவிதமான ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாடவில்லை.
கடந்த 16ம் திகதி இலங்கைக்குத் திரும்பியிருந்த அவர் தற்போது முதுகு உபாதை குணமாகியுள்ளதன் காரணமாகவே இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லவுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் விளையாட வில்லை. ஆனால் 27ம் திகதி நடைபெறவுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அல்லது 29ம் திகதி நடைபெறவுள்ள டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் மலிங்கா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலிங்கா, மும்பை இண்டியன்ஸ் அணி சார்பாக விளையாடாத இரண்டு போட்டிகளிலும் மும்பை இன்டியன்ஸ் அணி தோல்வியடைந்திருந்தது.
முதுகு உபாதை காரணமாக மலிங்கா கடந்த 14 மாதங்களுக்குள் போட்டிகளைத் தவறவிடும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளின் ஆரம்ப இரண்டு போட்டிகளையும் மலிங்கா முதுகு உபாதை காரணமாக தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக