//]]>3

சனி, 2 ஜூன், 2012

வவுனியா, பூந்தோட்டத்தில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் உடலமொன்று மீட்கப்பட்டது

வவுனியா, பெரியகுளம், பூந்தோட்டம் என்ற இடத்திலிருந்து பொலிஸார் உடலமொன்றை மீட்டுள்ளனர்.இந்த உடலம் நேற்றிரவு 9.30 மணியளவில் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.வயல் வெளியருகே இருந்த மரமொன்றில் சுருக்கிட்டுத் தொங்கியிருந்த நிலையிலேயே பொலிஸார் உடலத்தை மீட்டுள்ளனர்.உடலம் மீட்டகப்பட்ட வேளையில் சட்டைப்பையில் இருந்து 39 வயது, சண்முகம் இராஜதுறை என்ற விபரங்களுடன்கூடிய தேசிய அடையாள அட்டையும் பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிபாஷா பாசு மற்றும் சமீரா ரெட்டடி



இந்திய பொலிவூட் நட்சத்திரம் பிபாஷா பாசு மற்றும் கொலிவூட் நட்சத்திரம் சமீரா ரெட்டி இன்று சனிக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.கொழும்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கார்ல்ரன் சுப்பர் 7 ரக்பி போட்டியில் கண்டுகளிப்பதற்காகவே இவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ஏற்கவே இலங்கைக்கு சென்று வந்தவர்களை தம்பி சூரியவிர்க்கவும் விஜய்க்ககவும் மன்னிப்பு வழங்கப்பட்டது . அதேபோல் இம்முறையும் நடைபெறும்.

டுவிட்டர், பேஸ்புக் ஊடாக இலங்கைக்கு எதிராக சூழ்ச்சி



வெளிநாடுகளுக்கு தப்பியோடிய புலிகளாலும் மேற்குலக நாட்டவர்களினாலும் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இவர்களின் நிழல்கள் தேசிய அரசியலுக்குள் ஊடுருவி பிரிவினைவாதத்திற்கு நாட்டை நகர்த்தி செல்கின்றனர் எனவும் அமைச்சர் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் மையப் பகுதியை நோக்கி பிரிவினைவாத சக்திகளால் பிரயோகிக்கப்படும் சவால்களை ௭திர்கொள்ள பொதுமக்களின் ஆதரவு அரசிற்கு அத்தியாவசியமானதாகும். எனவே பேதமின்றி அரசுக்கு ஆதரவு வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும். ஆகஸ்ட் மாதத்திற்குள் ரூபாவின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்ய சர்வதேச புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு முகம் கொடுக்கும் வகையில் மத்திய வங்கி உசார் நிலையில் இருக்க வேண்டும். டுவிட்டர், பேஸ்புக் ஊடாகவும் நாட்டிற்கு ௭திரான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன ௭ன்றும் அமைச்சர் வீரவங்ச குறிப்பிட்டார்.
”வெனிசுலாவின் கிளர்ச்சியினை புரிந்து கொள்வோம்” என்ற நூல் இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (01) வெளியீடு கண்டது. இதில் விஷேட உரையாற்றியபோதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.
பூகோளவியல் ரீதியில் லத்தீன் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு தூரத்தில் காணப்பட்டாலும் அரசியல் ரீதியில் மிக நெருங்கிய நிலையிலேயே உள்ளது. ஆனால் அந்த நாடுகள் மேற்குலக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளுக்கு ஒன்றிணைந்து போராடி வருகின்றன. குறிப்பாக வெனிசுலா, கியூபா போன்ற நாடுகள் முன்னுதாரணமாக கொள்ளலாம்.
இதேநிலையே இன்று இலங்கைக்கும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையை பல்வேறு நோக்கங்களுக்காக ஆக்கிரமிக்கும் முன்னெடுப்புகளே இன்று காணப்படுகிறது. இதற்கு உள்நாட்டில் பல தரப்புக்களை ஒற்றர்களாகவும் பொருளாதார சதிகாரர்களாகவும் மேற்குலக சக்திகள் பயன்படுத்துகின்றன.
சிறையிலிருந்து விடுதலையான சரத் பொன்சேகா சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ௭ன்று கூறுகின்றார். இது யாருடைய தேவையாக இருக்க முடியும். சம்பந்தனுடன் கூட்டணியமைத்து கொண்டு இலங்கை தமிழனின் நாடு என்கிறார். இராணுவத்தில் இருந்தபோது இது சிங்கள வர்களின் நாடு என்கிறார். இவர்களைப் போன்றவர்களை மேற்குலக சக்திகள் நாட்டிற்கு ௭திராக பயன்படுத்துகின்றன.
ரூபாவின் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போர்க் காலத்தில் வீழ்ச்சியடையாத ரூபாவின் பெறுமதி தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது ௭ன்றால் இதன் பின்னணியில் நாட்டிற்கு ௭திராக சக்திகள் உள்ளமை வெளிப்படுகிறது. நஷ்டத்தில் இயங்கும் மிஹின் லங்கா, எயார் லங்கா போன்ற துறைகளை பாதுகாத்து பல கோடி ரூபா செலவிடும் அரசால் ரூபாவை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை ௭ன்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே நாட்டிற்குள் ஊடுருவியுள்ள அந்நிய சக்திகள் பல்வேறு துறைகளிலும் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. இவர்களே இன்று ௭திர்க்கட்சியைப் போன்று கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆகவே நாடு ௭திர்கொண்டுள்ள பல்துறைசார் சவால்களை தோல்வியடையச் செய்ய பொதுமக்கள் அரசுடன் ஒன்றிணைய வேண்டும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றத்திற்கு பௌத்ததுறவிக்கு 7 வருட சிறை



சிறீலங்காவின் சிங்கள பௌத்த துறவி ஒருவருக்கு பிரித்தானியாவில் 7 வருடச் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை நேற்று வெள்ளிக்கிழமை ஐஸ்வேத் க்ரௌவ்ன் நீதிமன்றம் வழங்கியது.
டல்வேட்டன் வீதியில் உள்ள குரொய்டொன் என்ற இடத்தில் வசித்து வந்த பிரித்தானியாவின் பிரதம சங்கநாயக்க தேரரும்இ தேமஸ் பௌத்த விஹாரை சிறீலங்காவின் கம்பஹா பரிவேனாதிபதியுமான ஸ்ரீ கல்யாணி சமாகி தர்ம மஹா சங்கத்தின் தலைவருமான பஹலாகம சோமரத்ன தேரருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டது.
1985ஆம் ஆண்டு 16 வயதாக இருந்த சிறுமி ஒருவரை தகாத முறையில் தாக்கிய குற்றச்சாட்டுக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இவரை சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் இருந்து ஆயுட்காலத்துக்கு தடுத்துள்ள நீதிமன்றஇ ஆயுட்காலத்துக்கு பாலியல் குற்றசாட்டுக்குள்ளும் பதிவு செய்துள்ளது.
எனினும் 1977ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் தேரர் குற்றவாளியாக காணப்படவில்லை.
தேரர் மீது 2011ஆம் ஆண்டு செப்டம்பரிலும் நவம்பரிலும் குறித்த இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.
இந் நிலையில் நீதிமன்றத்தில் பிரசன்னமான அவரை முன்னதாக நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்திருந்தது
எனினும் நேற்று அவருக்கு சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் முத்தான மூலிகைகள்!


இன்றைக்கு கூந்தல் வளர்ச்சிக்கும், கூந்தலுக்கு நறுமணம் ஊட்டவும் எண்ணற்ற ஷாம்பு, கிரீம் என விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றின் வருகைக்கு முன்னரே பண்டைய காலத்தில் பூந்திக்கொட்டை, கரிசலாங்கண்ணி, மருதாணி என எண்ணற்ற மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஷாம்பு, சோப்பு போன்றவைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு முடி கொட்டுவதை தவிர்க்கவும், கூந்தலின் வளர்ச்சிக்கும் இன்றைக்கும் அந்த மூலிகைகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
பூந்திக்கொட்டை
நாம் பயன்படுத்தும் குளியல்பொடி மற்றும் கேசப்பொடிகளில் இயற்கையின் கலவை அதிகமாக இருந்தால் தான் நமது தோலும், கேசமும் ஆரோக்கியமாக இருக்கும். கேசத்திற்கு பளபளப்பையும், தோலுக்கு வழுவழுப்பையும் தந்து நுரை பொங்க குளித்த திருப்தியை தரும் மூலிகை தான் பூந்திக்கொட்டை.
சபின்தஸ் எமார்ஜினேட்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சப்பின்டேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த மரத்தின் உலர்ந்த பழங்கள் பூந்திக்கொட்டை என்றும் பூவந்திக்கொட்டை என்றும், சோப்புக்காய் என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் பழத்தோலில் உள்ள சப்போனின்கள், சப்பின்டோசைடுகள், ஹெடராஜெனின்கள் மற்றும் டெர்பினாய்டுகள் பூஞ்சை கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, தோலுக்கு பிரகாசத்தையும் மென்மையும் கொடுக்கின்றன.
வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்துகொள்ளலாம். பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து, மேற்தோலை உரித்து, இடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய் தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசி, குளித்து வரலாம்.
உசிலை இலை, இலுப்பை பிண்ணாக்கு, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தை இலைகள், சிகைக்காய், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, நுண்ணியதாக அரைத்து, துணியில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை நீரில் கரைத்து சற்று நேரம் வைத்திருந்து பின் தலை மற்றும் உடலில் தேய்த்து குளித்துவர நுரை உண்டாகி, அழுக்கு நீங்கி, தோலும், கேசமும் சுத்தமடையும்.
கரிசலாங்கண்ணி
கூந்தல் வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி சிறந்த மூலிகையாகும். இந்த மூலிகைத் தைலம் கேச வளர்ச்சிக்கு உதவுவதோடு கூந்தல் உதிர்தலை தடுக்கும். முடிகளின் வேர்கால்களில் இந்த கூந்தல் தைலத்தை வைத்து மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வலுவடையும். உடல் குளிர்ச்சியடையும்.
வெந்தயம்
கூந்தலினை பட்டுப்போன்ற மென்மையாக்குவதில் வெந்தயம் சிறந்த மூலிகையாகும். வெந்தயத்தை இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் அதனை மைய அரைத்து தலையில் ஊறவைத்து குளிக்கலாம். இதனால் தலைக்கு குளிர்ச்சி ஏற்படும். கூந்தல் பட்டுப்போல மாறும்.
மருதாணி
கூந்தலை கருமையாக்குவதில் மருதாணி சிறந்த மூலிகை. இது இளநரையை தடுக்கும். கூந்தலில் பொடுகு ஏற்படாமல் தடுக்கும். கூந்தலின் வேர்கால்களை வலுவாக்கி உதிர்வதை தடுக்கும்.
சோற்றுக் கற்றாழை
சோற்றுக்கற்றாழை சிறந்த மூலிகையாகும். கூந்தல், சருமம் போன்றவற்றினை பாதுகாக்க சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோற்றுக் கற்றாழையின் உள்ளிருக்கும் சோற்றை எடுத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்ந்து வழுக்கையானவர்களுக்கு புதிய முடி முளைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கூந்தலின் வறட்சியை போக்கி மென்மையாக்குவதில் சோற்றுக்கற்றாலை முக்கிய பங்காற்றுகிறது.
கடுக்காய், நெல்லிப் பொடி
முடி உதிராமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.இதேபோல் ஜடமான்சி, குஷ்டா, கறுப்புஎள், நன்னாரி, நீல வண்ண அல்லி. செம்பருத்தி, பிருங்கராஜ் கரிசிலாங்கண்ணி), நீர்பிரம்மி, அதிமதுரம், குந்துமணி, குடூச்சி, இவைகளின் களிம்பை தலையில் தடவி வந்தால் முடி செழித்து, கருமையாக வளரும். கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி, இவற்றை பாலில் ஊற வைத்துக் குளித்தால், முடி உதிர்வது நிச்சயமாக நிற்கும்.



விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீகள்!


விண்டோஸ் 8 நுகர்வோருக்கான தொகுப்பினைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.அதற்கான ஷார்ட் கட் கீகள் கீழே தரப்பட்டுள்ளன.
Alt: மறைக்கப்பட்ட மெனு பார் காட்டப்படும்.

Alt + D: அட்ரஸ் பார் தேர்ந்தெடுக்கப்படும்.
Alt + P: விண்டோஸ் எக்ஸ்புளோரரில் Preview Pane காட்டப்படும்.
Alt + Tab: திறக்கப்பட்டுள்ள விண்டோக்களில் முன்னோக்கிச் செல்லும்.
Alt + Shift + Tab: திறக்கப்பட்டுள்ள விண்டோக்களில் பின்னோக்கிச் செல்லும்.
Alt + F4: அப்போதைய விண்டோ மூடப்படும். டெஸ்க்டாப்பில் ஷட்டவுண் விண்டோ மூடப்படும்.
Alt + Spacebar: அப்போதைய விண்டோவிலிருந்து ஷார்ட் கட் மெனுவினைப் பெறும்.
Alt + Esc: திறந்திருக்கும் புரோகிராம்களைச் சுற்றி வரும். அவை திறக்கப்பட்ட வரிசையில் இது மேற்கொள்ளப்படும்.
Alt + Enter: தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டத்திற்கான ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
Alt + PrtScn: அப்போதைய விண்டோ காட்சியின் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லப்படும்.
Alt + Up: விண்டோஸ் எக்ஸ்புளோரர் போல்டரில் ஒரு போல்டர் முன் செல்லப்படும். (எக்ஸ்பி (XP) சிஸ்டத்தில் Up Arrow போலச் செயல்படும்).
Alt + Left Arrow: முந்தைய போல்டரைக் காட்டும்.
Alt + Right Arrow: அடுத்த போல்டரைக் காட்டும்.
Shift + Insert CD/DVD: ஆட்டோ பிளே அல்லது ஆட்டோ ரன் கிளிக் செய்யப்படாமலேயே சிடி/டிவிடி இயக்கப்படும்.
Shift + Delete: தேர்ந்தெடுக்கப்பட்டது முற்றிலுமாக நீக்கப்படும். ரீசைக்கிள் பின்னுக்குக் கொண்டு செல்லப்படாது.
Shift + F6: விண்டோ அல்லது டயலாக் பாக்ஸில், பின் நோக்கிச் செல்லும்.
Shift + F10: தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளுக்கான கான்டெக்ஸ்ட் மெனுவினைத் தரும்.
Shift + Tab: விண்டோ அல்லது டயலாக் பாக்ஸில், பின் நோக்கிச் செல்லும். (Shift + F6 போல)
Shift + Click: தொடர்ச்சியாக உள்ளவற்றைத் தேர்ந்தெடுக்கும்.
Shift + Click: டாஸ்க் பார் பட்டனில் கிளிக் செய்கையில், புரோகிராமின் புதிய இயக்கக் காட்சியைக் கொடுக்கும்.
Shift + Rightclick: தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கான்டெக்ஸ்ட் மெனுவினைத் தரும்.
Ctrl பட்டனுடன் பெரும்பாலும் தற்போது பழக்கத்தில் உள்ள செயல்பாடுகளே மேற்கொள்ளப்படுகின்றன. மாற்றம் எதுவும் இல்லை.

சிவக்கார்த்திகேயனின் மனம்கொத்திப் பறவை


சின்ன விஷயத்துக்கு கூட பத்து பேரை வெட்டி சாய்க்கிற அப்பா, சித்தப்பா, அண்ணன் களைக் கொண்ட வசதியான வீட்டுப் பொண்ணு ஆத்மியா. அவங்க வீட்டு நேர் எதிர் வீட்டு பையன் சிவகார்த்திகேயன்.
அவங்க அப்பா (இளவரசு) ஆத்மியாவின் அப்பா கட்டும் புதிய பள்ளிக்கூடத்தின் கட்டிட கான்ட்ராக்டை எடுத்து செய்து கொண்டிருக்கிறார். மகன் சிவாவோ படிச்சுட்டு சில நேரங்களில் அப்பாவுக்கு உதவியா பல நேரங்களில் நண்பர்களுடன் வெட்டியா ஊரை சுத்தி வருகிறான்.
ஆத்மியாவும் சிவகார்த்திகேயனும் அன்புடன் பழகுகிறார்கள். திடீரென ஒரு வீச்சரிவா மீசை மாப்பிள்ளை வருகிறார். அவருக்கு ஆத்மியாவை நிச்சயம் பண்ணுகிறார்கள்.
இதைக் கேள்விப்பட்ட சிவா துடிதுடித்துப் போகிறான். தன் மனதில் இருக்கும் காதலை அவளிடம் சொல்கிறான். தனக்கு நிச்சயம் ஆனதை காரணம் காட்டி விலகிப் போகிறாள் அவள்.
அவளையே நினைத்து குடி மயக்கத்தில் புலம்பும் சிவாவை ஆத்மியாவுடன் சேர்த்து வைக்க முடிவு செய்யும் நண்பர்கள் ஆத்மியாவை மயக்கமடையச் செய்து இருவரையும் கடத்திக் கொண்டு போகிறார்கள். கண்விழித்த ஆத்மியாவோ தனக்கு சிவா மீது காதல் இல்லை என்கிறாள்.
அவனோ அவள் தனக்கு வேண்டாம்� என்கிறான். இந்நிலையில் ஆத்மியா வீட்டில் அவர்களை வலைவீசி தேடுகிறார்கள். தொடர்ந்து வரும் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் முடிவு என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.
மெரினா படத்திற்கு பிறகு முழு நீள கதாநாயகனாக வருகிறார் சிவகார்த்திகேயன். முதல் பாதியில் இவரை கலங்க விட்டிருக்கிறார்கள். அடுத்த பாதியில் இவர் களைகட்ட வைக்கிறார்.
இவருக்கு ஜோடியாக ஆத்மியா. பெரும்பாலும் சேலைகளிலேயே வருவதால் அம்மனாக ஜொலிக்கிறார். முதல் பாதியில் கேர் பண்ணாத இவருடைய நடிப்பு அடுத்த பாதியில் ரொம்பவே ஸ்கோர் பண்ணுகிறார் ஆத்மியா.
சிவகார்த்திகேயனுக்கு நண்பர்களாக வருகிறார்கள் சூரி, சிங்கம்புலி வகையறா. சூரியும் சிங்கம் புலியும் கம்பெனி போட்டு அடிக்கிற லூட்டியில் தியேட்டர் அதிர்கிறது. இடைவேளையில் என்ட்ரி கொடுக்கும் சாம்சும் அவர் நண்பரும் வந்த பிறகு படம் விறுவிறுப்பாகவும் செம காமடியாகவும் நகர்கிறது.
ஆத்மியாவையும் சிவகார்த்திகேயனையும் ஆத்மியாவின் அண்ணன் டீம் தேடும் போது சிங்கம் புலியையும் சூரியையும் அழைத்துக் கொண்டே போகும் இடமெல்லாம் செல்கிறார்கள்.
அவர்களிடம் வம்படியாக மாட்டிக் கொள்ளும் சாம்ஸ்� இந்த காட்சிகள் அரை நிமிடங்களுக்கு தொடர்ந்து வரும் காமெடியாக இருக்கிறது. டிங் டிங்� குத்துப்பாட்டு ஆட்டம் போட வைக்கிறது.
படத்தை இயக்கியிருக்கிறார் எழில். துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எழில் இந்தப் படத்தின் மூலம் இணைத் தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார்.
காதல், காமெடி, கலாட்டா என வழக்கமான ஸ்டைல் கதை என்றாலும் இடைவேளை ட்விஸ்ட், மாறுபட்ட திரைக்கதை யுக்தியில் படத்தை வேறு பாதையில் பயணிக்க வைத்திருக்கிறார் எழில்.