//]]>3

ஞாயிறு, 10 ஜூன், 2012

சுற்றுலாப் பயணியை கற்பழித்த கில்லாடி!



ஜேர்மனில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிப் பெண் ஒருவர் மாத்தறையில் திக்குவெலவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று காலை கற்பழிக்கப்பட்டு உள்ளார்



.ஆண் நண்பர் ஒருவரும் இவருடன் ஹோட்டல் அறையில் தங்கி இருந்து இருக்கின்றார். இவரும், ஆண் நண்பரும் வைகறை 2.30 மணி வரை நன்றாக குடித்து இருக்கின்றனர். இவர் போதையில் நன்றாக தூங்கி விட்டார்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து காலையில் பிந்திய நேரம் மீண்ட அவர் கூடவே படுத்து இருப்பவர் ஆண் நண்பர் என்று முதலில் நினைத்துக் கொண்டார்.
உற்று நோக்கியபோதுதான் அன்னிய நபர் என்று அறிந்து கொண்டார்.இவர் பெரிதாக சத்தமிட அந்நபர் உடுப்பு இல்லாமல் நிர்வாணமாக வெளியில் ஓடித் தப்பி விட்டார்.
கற்பழிக்கப்பட்டு உள்ளார் என ஜேர்மன் பெண் பொலிஸில் முறையிட்டு உள்ளார்.பொலிஸார் தீவிர விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.ஆயினும் எவரும் இது வரை கைது செய்யப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக