//]]>3

ஞாயிறு, 10 ஜூன், 2012

இளம் பெண்களை ஏமாற்றி கொழும்பில் பாலியல் தொழிலில்


பின்தங்கிய கிராமப் புறங்களிலுள்ள இளம் பெண்களை ஏமாற்றி தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி கொழும்பிற்கு அழைத்துவந்து, அச்சுறுத்தி பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மோசடி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சிறுவர், மகளீர் பாதுகாப்பு மேம்பாட்டு அதிகார சபைக்குக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இதுகுறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
நுவரெலியாவிலிருந்து கொழும்பிற்கு அழைத்துவந்து பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்ற இளம் பெண் ஒருவரே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
நுவரெலியாவிலிருந்து கொழும்பிற்கு அழைத்துவந்த நபர், கொழும்பில் தம்மை மற்றுமொரு நபரிடம் விற்பனை செய்துவிட்டதாக அந்த இளம் பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தன்னுடன் கிழக்குப் பிரதேசத்திலிருந்து பலவந்தமாக அழைத்துவந்த சில பெண்களும் சிறைவைக்கப்பட்டு பாலியல் தொழிலியல் பலாத்காரமாக ஈடுபடுத்தப்பட்டதாகவும் அந்த இளம் பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக