//]]>3

ஞாயிறு, 3 ஜூன், 2012

முருகன் ஆலயத்தினுள் இராணுவ உடையணிந்தோர் அட்டகாசம்


மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தை அண்டிய, முத்தையா சுவாமிகள் வசித்த கந்தவேள் எனும் முருகன் ஆலயத்தினுள் நேற்று முன்தினம் பிரவேசித்த இராணுவ உடையணிந்தோர் அங்கிருந்த கருங்கற்களினாலான தூண்கள், சிறிய கட்டடம் மற்றும் வழிபாட்டு பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அங்கு நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இச்சம்பவம் தொடர்பாக குறிப்பிடுகையில்,
தாந்தாமலை முருகன் ஆலயமும் அதனை அண்டிய பிரதேசங்களும் இந்துக்களின் பூர்வீக வழிபாட்டுக்குரிய புனித பிரதேசமாகும்.
இந்தப் பிரதேசங்களில் அண்மைக் காலமாக பெரும்பாண்மை இனத்தவர்களும் இராணுவத்தினரும் இந்துக்களின் வழிபாட்டு தலங்களை அழித்துவிட்டு, பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் கச்சைக்கொடி சுவாமிமலை எனும் இந்துக்களின் பூர்வீக பிரதேசத்தில் அங்குள்ள பௌத்த பிக்குகள் இராணுவம் மற்றும் பொலிசாரின் உதவியுடன் பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகன்றனர்.
இவற்றையும் நான் நேரில் சென்று பார்வையிட்டு விகாரை அமைப்பதை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டிருந்தேன்.
எனவே இந்துக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களை பூண்டோடு அழித்துவிட்டு அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு இலங்கை அரசின் அணுசரணையுடன் பௌத்த பிக்குகள் செயற்படுகின்றனர்.
இதற்கு இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பளிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கொழும்பில் கொலை செய்யப்பட்டவர் லெப்.கேணல் கௌசல்யனின் மெய்க்காவலர் உதயகாந்தன்


கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் லெ.கேணல் கௌசல்யனின் மெய்க்காவலராகப் பணியாற்றியவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டியில் முன்னணி பாடசாலை ஒன்றுக்கு வெளியே கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கொல்லப்பட்டவரின் சடலத்தை அவரது தந்தை நேற்று அடையாளம் காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு, கல்லாறைச் சேர்ந்த 38 வயதான கணபதிப்பிள்ளை உதயகாந்தன் என்பவரே கொலை செய்யப்பட்டவராவார்.
இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யனின் மெய்காவலராக 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரை பணியாற்றியவராவார். இதன்பின்னர் பிரித்தானியாவுக்குச் சென்று குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கொழும்பு திரும்பிய இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் இவரது சடலம் பம்பலப்பிட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யன் கருணா குழுவினரால், வெலிக்கந்தையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க

நீதி கிடைக்காவிட்டால் போராடத்தயார் முல்லைத்தீவு மக்கள்


தமது அவலநிலை தொடருமேயானால் தாம் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவதுடன் உண்ணாவிரதத்திலும் ஈடுபடப் போவதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவுக் கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழில் நெருக்கடிகளுக்கு ஆளாகின்றார்கள் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் சி.அருள்ஜெனிஸ் பேட் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் கீழ் 18 கடற்றொழிலாளர் சங்கங்கள் உள்ளன. இந்தச் சங்கங்களின் கீழ் சுமார் 4 ஆயிரத்து, 300இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடற்றொழிலை வாழ்வாதார தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
முல்லைத்தீவு கொக்கிளாய் முதல் சுண்டிக்குளம் பேய்ப்பாறைப் பிட்டி வரையான 84 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட கடற்கரையோரப் பகுதிகள் இங்கு உள்ளன. இதில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதைவிடச் சிறுகடல்பகுதிகளாகச் சாலைக்கடல், சுண்டிக்குளம்கடல், நந்திக்கடல், நாயாறு, குமுழமுனை, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் போன்றன காணப்படுகின்றன.
இந்த நிலையில் சிறுகடற்பகுதிகளில் சட்டவிரோத இயந்திரப்பாவனை, கூட்டுவலைப் பயன்பாடு வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற செயற்பாடுகளும் ஆழ்கடலில் அத்துமீறிய மீன்பிடிகளும் வேறுஇடங்களைச் சேர்ந்த மீனவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இங்குள்ள தொழிலாளர்கள் தொழிலை இழந்துள்ளனர்.
இந்த நிலை தொடர்பாக மாவட்ட அரச அதிபர் கடற்றொழில் நீரிய திணைக்கள அதிகாரிகள், இராணுவ அதிகாரி, பொலிஸார் எனப் பலருக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
இந்த நிலை நீடிக்குமானால் அனைத்து மக்களும் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படுவதுடன் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நிலையும் தவிர்க்க முடியாதென முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

5 நிமிடத்தில் 100 முத்தம் வாங்கிச்சாதனை தமிழ்ப் படம்


ஐந்து நிமிடத்தில் நூறு முத்தங்கள் இடம்பெற்ற படம்நம்ம மாஸ் ஹீரோக்களை செம கடுப்பில் தள்ளிய கோலிவுட்டின் முதல் சினிமா ‘தமிழ்படம்’.இந்தப்படத்தின் கதாநாயகி திஷா பாண்டே அள்ளும் அழகுடன் அறிமுகமானதால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் டெபாசிட் காலியாகமால் தப்பித்தார்.
ஆனால் பாவம் அந்த கிண்டல் படத்தில் நடித்த ஒரே குற்றத்துக்காகவே மாஸ் ஹீரோக்கள் யாரும் திஷா இருக்கும் திசை பக்கம் திரும்பவே இல்லை! இதனால் ‘தமிழ்ப்படம்’ ஹிட் ஆனாலும் திஷா பாண்டே திக்கு தெரியாத காட்டில் சிக்கிக் கொண்டதுபோல திக்கு முக்காடிப் போனார்.
இந்த நேரத்த்தில் அவருக்கு கைகொடுத்தார் ஒரு அறிமுக இயக்குனர்! அவர் ‘மயங்கினேன் தயங்கினேன்’படத்தை இயக்கியிருக்கும் வேந்தன்!
நிதின் சத்யாவுடன் திஷா ஜோடி சேர்ந்த இந்தப்படத்திற்கு இப்போது தமிழக சென்சாரின் தயவில் அதிரடி விளம்பரம் கிடைத்திருக்கிறது.
திஷாவும், நிதின் சத்யாவும் இந்தப்படத்துக்காக நூறு முத்தங்களை ஒருவருக்கொருவர் வழங்கிக்கொள்வதுபோல படத்தில் ஐந்து நிமிடம் இடம்பெற்றிருக்கிறது ஒரு காட்சி! இந்த கலர்ஃபுல் காட்சிக்கு தியேட்டரில் விசில் பறக்கும் என்று இயக்குனர் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, சென்சார் காட்சி திரையிட்டு முடிந்ததும் கத்தரிகள்தான் பறந்தது என்கின்றனர்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற மிக நீளமான முத்தக்காட்சி உட்பட நூறு வெட்டுக்களையும் பதினந்து சவுண்ட் மியூட்களையும் சென்சார் அதிகாரிகள் பரிந்துரை செய்திருகிறார்கள்!
இது சமீபத்தில் வேறு எந்தப்படமும் சந்திக்காத ரெகார்ட் பிரேக் கத்தரிப்பு என்பதால் திஷா பாண்டே தனக்கு மூன்றாவது வாய்ப்பு உறுதி என்று நம்பிக்கொண்டிருக்கிறாராம்!

கிராம மக்களிடம் அடிவாங்கிய நடிகை


ஆந்திராவில் நெல்லூர் எம்.பி. தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிகளில் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.நெல்லூர் எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக டி. சுப்புராமரெட்டி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நடிகை வாணிஸ்ரீ பிரசாரம் செய்தார்.
ரெட்டி பாளையம் என்ற இடத்தில் பிரச்சார வேனில் நின்றபடி பேசியபோது, மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியை கடுமையாக தாக்கினார்.
அவர் பேசும்போது, இந்த இடைத்தேர்தலில் சுப்புராம ரெட்டிக்கு ஓட்டு போடுங்கள். அவரை வெற்றி பெறச் செய்தால் தொகுதி முன்னேற்றத்துக்கு பாடுபடுவார். தொகுதிக்கு பல நன்மைகளை செய்வார். ராஜசேகரரெட்டி இருந்தபோது இந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்றார்.
அப்போது, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ராஜசேகர ரெட்டி பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் இருக்கும் போதுதான் எங்களுக்கு பல நன்மைகள் கிடைத்தது. இப்போதுதான் எதுவும் கிடைக்கவில்லை என்றனர்.
உடனே வாணிஸ்ரீ நீங்கள் வாயை மூடிக்கொண்டு என் பேச்சை கேளுங்கள், வில்லிபோல் பேசாதீர்கள் என்றார். இதைக்கேட்டதும் பெண்கள் ஆவேசம் கொண்டனர்.
எங்கள் ஊருக்கு வந்து விட்டு எங்கள் வாயை மூடச் செல்கிறாயா? என்று கூச்சலிட்டப்படி அவர் மீது செருப்புகளை வீசினர். காங்கிரஸ் நிர்வாகிகளும் போலீசாரும் அரண்போல் நின்று வாணிஸ்ரீயை பிரசார வேனில் இருந்து இறக்கி வேறொரு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் பெண்கள் அந்த காரை விரட்டி சென்றனர். போலீசார் அவர்களை நெருங்கவிடாமல் தடுத்தனர்.
போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து புறப்பட்ட நடிகை வாணிஸ்ரீ பின்னர் ராமச்சந்திராபுரத்தில் பிரசாரம் செய்தார். தொடர்ந்து பேசிய கூட்டத்தில் ராஜசேகர ரெட்டியை பற்றி எதுவும் குறிப்பிடாமல் பிரசாரத்தை முடித்துக் கொண்டார்.

டெங்கிலிருந்து தப்பிக்க 10 வழிகள்.


காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெங்கு காய்ச்சலின் பாய்ச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி?
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?”
”காய்ச்சல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இதனுடன் சோர்வு, தீவிரமானத் தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு, எலும்பு உடைவது போன்று வலி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள்.”
”இந்த அறிகுறிகள் இல்லாமலும் ஒருவருக்கு டெங்கு இருக்குமா?”
”ஆம், கொசு கடித்து நோய்க் கிருமி மனித உடலுக்குள் சென்று, மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை பல்கிப் பெருகும். அதனால், இந்தக் காலகட்டத்துக்குப் பிறகும்கூட டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி வெளிப்படும் வாய்ப்பு உண்டு.”
”டெங்கு காய்ச்சலைக் கவனிக்காமல்விட்டால் என்ன ஆகும்?”
”டெங்கு காய்ச்சலை ஏழு நாள் காய்ச்சல் என்று கூறுவார்கள். நோய் பாதிப்பு ஏற்பட்டு ஏழு நாட்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள ரத்தத் தட்டு அணுக்களை அழித்துவிடும். இந்தத் தட்டு அணுக்கள்தான் ரத்தம் உறைவதற்கு மிக முக்கியமான காரணம். ரத்தத் தட்டுக்கள் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிர் இழப்புகூட நேரிடலாம்.”
”டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு ஊசி, மருந்து ஏதேனும் உள்ளதா?”
”தடுப்பு ஊசி, மருந்து எதுவும் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை எடுப்பதன் மூலம் மட்டுமே உயிர் இழப்பைத் தடுக்க முடியும்.”
”டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படும்?”
”டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால், இது குணமாக்கக்கூடிய காய்ச்சலே. ஒருவருக்கு ரத்தத்தில் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை தோராயமாக ஒன்றரை லட்சம் இருக்க வேண்டும். ஆனால், டெங்கு வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவருக்கு அது வெறும் ஆயிரமாகக்கூடக் குறைந்துவிடலாம். எனவே, தேவைப்பட்டால், ரத்தத் தட்டு எண்ணிக்கையைப் பொருத்து ரத்தம் செலுத்துதல் அல்லது ரத்தத் தட்டு அணுக்கள் செலுத்துதல் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். ஒரே விஷயம்… காலத்தைக் கடத்தாமல் சிகிச்சை அளித்துவிட வேண்டும்.”
”டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?”
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும். டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய டெங்கு ஐ.ஜி.எம். எலிசா, பி.சி.ஆர். ஆகியப் பரிசோதனைகள் செய்யப்படும். பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே நன்றாக ஓய்வெடுக்கலாம். உடலில் நீர்ச் சத்து குறையும் என்பதால், அதிக அளவில் நீர்ச் சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நிலைமை மோசமாகத் தொடங்கினால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சைப் பெற வேண்டும்.”
”டெங்கு காய்ச்சல் எவ்வளவு நாட்கள் வரை நீடிக்கும்?”
”ஏழு நாட்களில் சரியாகிவிடும். உடல் வலி, சோர்வு போன்ற இதன் பாதிப்புகளில் இருந்து இரண்டு வாரங்களில் வெளிவரலாம்.”
”டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?”
”டெங்குவைத் தவிர்க்கக் கொசு ஒழிப்பு ஒன்றே வழி. டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி’ கொசு நன்னீரில் முட்டை இடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு சுகாதாரமாகச் சுற்றுச்சூழலைப் பராமரிக்க வேண்டும்.
வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசு வலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, ஸ்பிரே போன்றவையும் பயன் கொடுக்கும்.
வீட்டுச் சுவர்கள் மீது ‘டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிப்பது பலன் கொடுக்கும். ஜன நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில், 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் ‘கிரிசாலை’ப் புகையை செலுத்துவதும் கொசுக்களை விரட்ட உதவும்.
இவை எல்லாவற்றுடன், சுற்றுப்புறச் சுத்தம் முக்கியம்!”
டெங்கு காய்ச்சல் தடுக்க…
வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கவிடாதீர்கள். தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தால் சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றுவதற்குக் காத்திருக்காமல், நீங்களே தண்ணீரை அகற்றுங்கள்.
கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம். கொசு எதிர்ப்புக் களிம்பைப் பூசிக்கொள்ளுங்கள்.
குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிக் குடியுங்கள்.
காய்ச்சல் வந்தால் உடனே செய்ய வேண்டியது…
டெங்கு அறிகுறி தெரிந்தால், சிறிதும் தாமதம் இன்றி உடனடியாக மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தைக் குறைத்துவிடும். உடலின் நீர் இழப்பைத் தடுக்க இளநீர், கஞ்சி, உப்பு-சர்க்கரைக் கரைசல் போன்ற நீராகாரமாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எப்படிப் பரவாது…
ஒருவரை ஒருவர் தொடுவதால் டெங்கு பரவாது. தும்மல், இருமல் மூலமும் இது பரவாது.

நீரிழிவு நோய் இரத்த கோளாறுக்கு பாகற்காய்! மருத்துவம்


காய்கறி வகைகளில் பாகற்காய் மருத்துவத்தில் சிறந்து விளங்குகின்றது..
இரத்த கோளாறுகள்.
பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்ற வற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
காலரா மற்றும் வாந்தி பேதி
ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்ச சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும். காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.
நீரிழிவு நோய்
பழத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை  ஜீஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது.
கண் பிரச்சினைகள் நோய் எதிர்ப்பு
தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும். பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும்.பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.
கல்லீரல் பிரச்சினை
பாகற்காற் பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு சிறந்ததாகும்.. இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மூல வியாதி:
ஒரு டம்ளர் மோரில் மூன்று டீஸ்பூன் பாகற்காய் சாறு சேர்த்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும். மேலும் பாகற்காய் செடியின் வேர்களை பேஸ்ட் போல அரைத்து மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர மூலநோய் குணமாகும்.
சொரியாஸிஸ்
கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு,சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிடவேண்டும்.
சுவாச கோளாறுகள்
பாகற்காய் நச்சுத் தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாச கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜீஸ் செய்தோ சாப்பிட சுவாச கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.

ம.அரசின் விலை குறைப்பு தொடர்பில் ‘ஜெ’ சீற்றம்!


கதையை விடுங்கோ

கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை கடந்த வாரம் லிட்டருக்கு 7ரூபாய் 50 பைசா அளவிற்கு உயர்த்தின.
இந்தியா முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி கடந்த 30ம் தேதி எதிர்கட்சிகள் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தின.
தற்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இவ் விலை குறைப்பு மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்த விலைக் குறைப்பு “யானைப் பசிக்கு சோளப்பொறி” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
உயர்த்தப்பட்ட 7 ரூபாய் 50 பைசாவில் 2 ரூபாய் குறைப்பு என்பது ஏழை எளிய மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன்தராது. இந்த சிறிய அளவிலான விலை குறைப்பு மக்களின் கோபத்தை எந்தவிதத்திலும் தணித்துவிடாது.
எனவே ஏற்றப்பட்ட பெட்ரோல் விலையை முழுவதும் திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.என்று தெரிவித்தார்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்:நடிகை சோனா


“நான் பொம்பளை சிங்கம். கோடி ரூபாய் கொடுத்தாலும் லெஸ்பியனாக நடிக்க மாட்டேன்” என்கிறார் நடிகை சோனா.
நேற்று (01) தன் பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகை சோனா, செய்தியாளர்களிடம் கூறுகையில், ” 86 கிலோ எடை இருந்த நான் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் 70 கிலோவாக குறைந்து இருக்கிறேன். இன்னும் உடல் எடையை குறைத்து, சினிமா உலகையே திரும்பி பார்க்க செய்ய வேண்டும். இதுதான் என் பிறந்த நாள் சபதம்.
இந்த பிறந்த நாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து 3 வயது பெண் குழந்தையை தத்து எடுக்கப் போகிறேன்.
நிச்சயமாக என் சொந்த வாழ்க்கையை படமாக தயாரிப்பேன். அதன்மூலம் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வெளியுலகம் தெரிந்து கொள்ளச் செய்வேன்,” என்றார்.
நமீதா ஒரு படத்தில் லெஸ்பியனாக நடிக்க மறுத்து இருக்கிறார். அப்படி ஒரு வேடம் உங்களுக்கு வந்தால், நடிப்பீர்களா?, என்று கேட்டதற்கு, “நான் பொம்பளை சிங்கம். கோடி ரூபாய் கொடுத்தாலும், லெஸ்பியனாக நடிக்க மாட்டேன். அதேபோல் நிர்வாணமாகவும் நடிக்க மாட்டேன். பணம்தான் பெரிது என்று நினைத்திருந்தால், வருடத்துக்கு 50 படங்களில் நான் நடித்திருப்பேன்,” என்றார் அசராமல்.

த்ரிஷா – தெலுங்கு நடிகர் இடையில் கும்மியடித்த பிபாஷா பாசு?


த்ரிஷா மற்றும் தெலுங்கு நடிகர் ராணா நெருக்கமாக பழகிவந்த நிலையில், தற்போது இருவர் நெருக்கத்திலும் சரசரப்பு ஏற்பட்டுள்ளது. இதர்கு காரணம் ராணா – பிபாஷா இடையில் ஏற்பட்ட நெருக்கம் தானாம் என்று பேசப்படுகிறது.
இது தொடர்பில் ராணா தெரிவிக்கையில்…
நானும் பிபாஷாவும் காதலர்கள் எல்லாம் கிடையாது நல்ல நண்பர்கள் மட்டுமே என்றார்.
மேலும் தனது நீண்ட நாள் காதலியான த்ரிஷாவுடனான உறவு நன்றாக இருப்பதாகவும், அவரை பிரியும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் இது குறித்து ராணாவுக்கு நெருக்கமான தரப்பினரால்…
பிபாஷாவுடன் ராணா நெருக்கமானது த்ரிஷாவை கடுப்பாக்கியுள்ளது. இதன் காரணமாகவே த்ரிஷா, ராணா இடையிலான நெருக்கம் முறிந்துள்ளது என்று கூறப்படுகிறது.

யுவதி சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம்


யுவதி ஒருவர் சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்துள்ள சம்பவமொன்று மினுவன்கொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
19 வயது யுவதி ஒருவர், 15 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
குறித்த யுவதியை எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருவருக்கும் இடையில் காதல் உறவு நீடித்து வந்ததாகவும் தெரியவருகிறது.
இதன்படி குறித்த சிறுவன் கடந்த 26ம் திகதி யுவதியின் வீட்டுக்குச் சென்று நேற்று முன்தினம் (31) வரை அங்கேயே தங்கியதாகவும் சிறுவனின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, யுவதி கைதுசெய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது.

அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு ஆயுள் தண்டனை


எதிர்ப்பாளர்கள் 846 பேரை படுகொலை செய்தது தொடர்பான வழக்கில் எகிப்தில் விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் அதிபராக இருந்தவர் ஹோஸ்னி முபாரக். கடந்த ஆண்டு முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி நடைபெற்றது இக்கிளர்ச்சியின் போது எதிர்ப்பாளர்கள் 846 பேரை படுகொலை செய்ததாக முபாரக் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இதே வழக்கில் முபாரக் ஆட்சிக்காலத்து அமைச்சர் ஒருவர் மற்றும் அவரது மகன் உட்பட 6 பாதுகாவலர்கள் மீதும்குற்றம்சாட்டப்பட்டுளது.
இந்த வ்ழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பு நேரலையாகவும் ஒளிபரப்பபடும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தீர்ப்பு நேரத்தின் போது பெருமளவிலானோர் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். 846 பேரை படுகொலை செய்த வழக்கில் முபாரக், முன்னாள் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆனால் முபாரக்கின் மகன் மற்றும் 6 பேரை குற்றவாளிகள் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இதற்கு நீதிமன்றத்தில் கூடியிருந்தோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.