//]]>3

ஞாயிறு, 3 ஜூன், 2012

அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு ஆயுள் தண்டனை


எதிர்ப்பாளர்கள் 846 பேரை படுகொலை செய்தது தொடர்பான வழக்கில் எகிப்தில் விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் அதிபராக இருந்தவர் ஹோஸ்னி முபாரக். கடந்த ஆண்டு முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி நடைபெற்றது இக்கிளர்ச்சியின் போது எதிர்ப்பாளர்கள் 846 பேரை படுகொலை செய்ததாக முபாரக் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இதே வழக்கில் முபாரக் ஆட்சிக்காலத்து அமைச்சர் ஒருவர் மற்றும் அவரது மகன் உட்பட 6 பாதுகாவலர்கள் மீதும்குற்றம்சாட்டப்பட்டுளது.
இந்த வ்ழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பு நேரலையாகவும் ஒளிபரப்பபடும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தீர்ப்பு நேரத்தின் போது பெருமளவிலானோர் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். 846 பேரை படுகொலை செய்த வழக்கில் முபாரக், முன்னாள் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆனால் முபாரக்கின் மகன் மற்றும் 6 பேரை குற்றவாளிகள் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இதற்கு நீதிமன்றத்தில் கூடியிருந்தோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக