//]]>3

புதன், 27 ஜூன், 2012

புலனாய்வுப்பிரிவின் ஆவணங்கள் திருட்டு


அரச புலனாய்வுப் பிரிவின் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் பல திருடு போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவனுடைய காலை இழுத்து ஜீப்பில் ஏற்றவும் – பொலிஸ் அடாவடி


நகர அபிவிருத்திக்கு பொறுப்பாக செயற்படும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி நுகேகொட வலயத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமன் எதிரிசிங்க, கடந்த 21 ஆம் திகதி தலவத்துகொட – கோகந்தர வீதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸிக்கு சொந்தமான 29 ஏக்கர் காணியில் புகுந்து அதில் இருந்த கட்டடத்தை இடித்து அகற்றியுள்ளனர்.குறித்த கட்டடம் சட்டவிரோதமானதென தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பொலிஸாரை அனுப்பி நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த அடாவடியை மேற்கொண்டுள்ளது.பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமன் எதிரிசிங்க கட்டடத்தை இடிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது தவறு தேசிய பிக்குகள் முன்னணி


தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனச்சுட்டிக் காட்டியுள்ள தேசிய பிக்குகள் முன்னணி, யுத்தம் முடி வடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

பர்தாவை அகற்றாத பெற்றேர் ஒருவருக்கு கல்லூரி அனுமதி மறுப்பு


பர்தாவை அகற்றாத காரணத்தால் லண்டன் கல்லூரியில் நடந்த பெற்றோர் சந்திப்பு கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விபச்சாரம் : 79 சிறுமிகள் மீட்பு


அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபட்ட 79 சிறுமிகளை போலீசார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக 104 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் 13 வயது முதல் 17 வயது வரையுள்ள பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.