//]]>3

புதன், 27 ஜூன், 2012

புலனாய்வுப்பிரிவின் ஆவணங்கள் திருட்டு


அரச புலனாய்வுப் பிரிவின் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் பல திருடு போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனி நபர் அல்லது குழுவாக இந்த ஆவணங்கள் திருடப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் குறித்து அந்தப் பிரிவில் பணியாற்றிய உதவியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் நேற்று (25) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். நமோஜ் நுவன் நவரத்ன என்ற இந்த சந்தேக நபர் 50,000 ரூபா பிணையிலும், சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக