//]]>3

வெள்ளி, 11 மே, 2012

பாகற்காய் பகோடா



சக்கரை நோயளிகளுக்கு பாகற்காய் ரொம்போ நல்லது… ஆனா அதன் கசப்பு சுவை பிடிக்கலையா…?
கீழுள்ளவாறு பகோடா ஆக்கிப் பாருங்க, சின்னவங்க கூட ரொம்போ விரும்புவாங்க..!
இதனுடைய செய்முறை மிகவும் எளிது…
தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 1/4 கிலோ
பூண்டு – 2 பல்
இஞ்சி – சிறிய துண்டு
கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
பெருங்காயம் – 1/4 தே.கரண்டி
உப்பு – 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
பட்டர் – 1 தே.கரண்டி(விரும்பினால்)
எண்ணெய் – பொரிப்பதற்கு
* பாகற்காயினை சிறிய சிறிய வட்ட வடிவமாக வெட்டி கொண்டு தண்ணீரில் போட்டு கழுவி எடுத்து தனியாக வைக்கவும்.
* இஞ்சி, பூண்டுனை தோல் உரித்து கராட் துறுவியினால் துறுவி பாகற்காயுடன் சேர்க்கவும்.
* பாகற்காயுடன் (எண்ணெய் தவிர) கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* எண்ணெயினை காயவைத்து பாகற்காயினை போட்டு பொன்நிறமாக பொரித்து எடுக்கவும். இப்பொழுது சுவையான பாகற்காய் பகோடா ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக