//]]>3

வெள்ளி, 11 மே, 2012

பஸ் வண்டி பாதையை விட்டு விலகி பனை மரத்துடன் மோதியது



நீர்கொழும்பு, குருநாகல் பிரதான வீதியில் கொக்கவில பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பத்துப் பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியே இன்று காலை 6.30 மணியளவில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
பஸ் வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பஸ் பாதையை விட்டு விலகி பனை மரத்துடன் மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக