//]]>3

வெள்ளி, 11 மே, 2012

அம்மன் ஆலயத்தில் பாம்பு பொந்துக்குள் சிவலிங்கம்!



அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரையடுத்துள்ள மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்தில் புராதன பாம்புப் பொந்துக்குள் திடீரென சிவலிங்கம் ஒன்று தோன்றியது.

அம்மன் ஆலய பாம்பு பொந்துக்குள் சிவலிங்கம் இருப்பதாக தான் கனவு கண்டதாக அக்கரைப்பற்றிலுள்ள கா.மல்லிகா என்ற பெண் கூறியதை ஆலய நிருவாகத்தினர் அதனை பார்வையிட்டனர்

.

பின்னர் கல்லாற்றைச் சேர்ந்த குடைச்சாமி சித்தரின் உதவியுடன் புற்றினுள் இருந்த சிவலிங்கத்தை எடுத்து ஆலயத்தினுள் பிரதிஸ்டை செய்தனர். பெருந்தொகையான மக்கள் இதனை வழிபாட்டு வருகின்றனர் என காரைதீவில் உள்ள செய்தியாளர் சகாதேவராசா அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »