//]]>3

வெள்ளி, 11 மே, 2012

கார்ப்பெட் வீதியில் பறந்த ஓட்டுனர் வைத்திய சாலையில்



சுன்னாகம் பகுதியில் வேகமாகச் சென்ற வாகனம் பாதையை விட்டு விலகி அருகில் உள்ள மின் கம்பத்துடன் மோதுண்டதில் தடம்புரண்டடு விபத்துக்குள்ளாகியது.
சுன்னாகம் பிரதேச செயலக ஒழுங்கைக்கு அருகாமையில் நேற்று இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் வாகனச் சாரதிய படுகாயமுற்ற நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அன்மையில் காப்பெற் வீதி அமைக்கப்பட்ட நிலையில் இந்த பகுதியில் அன்மைக்காலமாக வாகனங்கள் மிகவும் வேகமாக செல்வது வழமையாகும்.
அந்த வகையில் வேகமாக வந்த வாகனமே வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. மின்கம்பம் மீது மோதியதால் அந்தப் பகுதயில் சிறிது நேரம் மின்சாரம் பாதிக்கப்பட்டது.
குறிப்பிட்ட வாகனத்தை செலுத்தி வந்த சாரதி ஏற்கனவே காவற்துறையினர் மறித்தும் நிற்காது தொடர்ந்து வாகனத்தை செலுத்தி பொது மக்கள் இராணுவம் எனப் பலரையும் காயப்படுத்திய குற்றத்திற்க்காக கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படவர் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக