//]]>3

சனி, 30 ஜூன், 2012

சண் சீ கப்பலின் மற்றுமோர் ஏஜென்டு கைது.

சன் சீ கப்பலில் 492 அகதிகளை கனடாவுக்கு அனுப்பி வைத்தது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆறு பேரில் ஒருவரான நடராஜா மகேந்திரன் என்பவரை கனேடிய காவல்துறை கைது செய்துள்ளது. ரொரண்டோ பியார்சன் அனைத்துலக விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கனடாவில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டும் இன்னமும் தலைமறைவான உள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நடராஜா மகேந்திரன் யாழ்ப்பாணம், இணுவிலை பிறப்பிடமாக கொண்டவர், கனேடியக் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக