//]]>3

புதன், 27 ஜூன், 2012

பர்தாவை அகற்றாத பெற்றேர் ஒருவருக்கு கல்லூரி அனுமதி மறுப்பு


பர்தாவை அகற்றாத காரணத்தால் லண்டன் கல்லூரியில் நடந்த பெற்றோர் சந்திப்பு கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


லண்டனில் மான்செஸ்டரின் வேலி ரேஞ்ச் பகுதியில் வசிப்பவர் அப்துல் 40. தொழிலதிபர். இவரது மனைவி மரூன் ரபிக் 40. இவர்களுக்கு அவைஸ் 18 மற்றும் இப்ராகிம் 12 என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதே பகுதியில் உள்ள கல்லூரியில் அவைஸ் படிக்கிறான். இந்த கல்லூரியில் பெற்றோர் சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டதால் மரூன் ரபிக் பர்தா அணிந்து வந்தார். இவரை தடுத்த கல்லூரி காவலர்கள் பர்தாவை அகற்றினால் தான் கல்லூரிக்குள் அனுமதிப்போம் என்றனர்.

கடைசி வரை மரூன் ரபிக் பர்தாவை அகற்ற மறுத்ததால் அவர் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை.”பிரிட்டனில் பிறந்து வளர்ந்த நான் கல்லூரிக்கு அடிக்கடி வருகிறேன். இருப்பினும் என்னை பர்தாவை அகற்றச்சொல்லி வருத்தமடைய செய்துள்ளனர்’ என மரூன் ரபிக் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக