//]]>3

புதன், 16 மே, 2012

அம்மா செய்யாத கடமையை செய்த கேப்டன் படை…!



ஆளும் அ.தி.மு.க புதுக்கோட்டை இடைத் தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 24 ந் தேதி முதல்கட்ட பிரச்சாரத்தை பிரகதம்பாள் கோயிலில் இருந்து தொடங்கினார்கள்.
ஆனால் அ.தி.மு.க வேட்பாளர் கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர், மற்றும் கட்சியின் பெயரை முன்னதாக கொண்டுள்ள அண்ணவையும் மறந்து விட்டார். அ.தி.மு.க கட்சி தொடர்பாக எந்த நிகழ்ச்சி நடந்தாலும் எம்.ஜி.ஆர் சிலைக்கும், அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகே அடுத்த பணியை செய்வார்கள். ஆனால இந்த முறை இது வரை இவர்களுக்கு மாலையும் இல்லை மரியாதையும் செய்யவில்லை.
ஆளும் அ.தி.மு.க எம்.ஜி.ஆர், அண்ணாவை மறந்தது.ஆனால் தே.மு.தி.க எம்.ஜி.ஆர், அண்ணாவை மறக்கவில்லை.
அதனால் தான் ஒவ்வொரு முறையும் சிலைகளுக்கு மாலை போடுவது வழக்கம். அதே போல இன்று தே.மு.தி.க வேட்பாளராக மா.செ ஜாகிர் உசேன் அறிவிக்கப்பட்டதும் மா.செ தலைமையில் கட்சியினர் எம்.ஜி.ஆர், அண்ணா சிலைகளுக்கு மாலை போட்டு மரியாதை செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக