பிரபல நடிகை ஒருவர் தனது மூன்று மாத கர்ப்பத்தைக் கலைத்ததால் அமைச்சர் ஒருவர் மிகுந்த கவலையில் இருப்பதாக தெரியவருகிறது.
கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து நேற்று (25) இந்த நடிகை கருவைக் கலைத்துள்ளார்.
இரத்தப் போக்கு அதிகமாக இருப்பதால் கருவைக் கலைப்பதாக நடிகை காரணம் கூறியுள்ளார்.
கடந்த வெசாக் தினத்தன்று தனியார் வைத்தியசாலைக்குச் சென்று கருக்க லைக்க நடிகை முயற்சித்த போதிலும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அதனை செய்ய முடியாமல் போயுள்ளது.
கிடைத்துள்ள தகவல்களின்படி, பிரபல அமைச்சர் ஒருவரால் இந்த நடிகை கர்ப்பமானதாகவும் இந்த விடயத்தை நடிகையின் கணவர் அறிந்திருந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
குழந்தை மீது தீராத ஆசைக்கொண்ட இந்த அமைச்சர் கடந்த ஞாயிறன்று, நடிகையின் கணவரை சந்தித்து குழந்தையின் அனைத்து செலவுகளையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும், கருவை கலைக்க வேண்டாம் எனவும் கோரியுள்ளார். அதற்கு நடிகையின் கணவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும், குழந்தை பிறக்கும்வரை நடிகையை வெளிநாட்டில் இருக்க வழிசெய்யுமாறு கோரியுள்ளார். இதற்கு அமைச்சரும் சம்மதம் வெளியிட்டுள்ளார்.
எனினும், அமைச்சருக்கும், கணவருக்குமிடையிலான இணக்கப்பாட்டை மறுத்த நடிகை தனித் தீர்மானத்தின்படி கருவை கலைத்ததால் பிரபல அமைச்சர் தற்போது மிகுந்த கவலையில் இருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக