//]]>3

திங்கள், 14 மே, 2012

நயன்தாரா பண கடத்தல் விவகாரம் பீதியில் பிரபல நடிகைகள்


நயன்தாரா வெளிநாடு சென்று விட்டு திரும்பிய போது விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினார். அவர் ரூ.20 லட்சத்தை வெளிநாட்டுக்கு எடுத்து சென்றதாகவும்அந்த பணத்தை எதற்காக கொண்டு சென்றீர்கள் என்று அதிகாரிகள் கேள்விகளால் துளைத்ததாகவும் செய்தி வெளியானது.
40 நிமிடம் நயன்தாராவிடம் விசாரணை நடந்ததாக கூறப்பட்டது. இது சக நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தை எடுத்துச் செல்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.
அத்துடன் தங்கள் கணக்குகளை ஆடிட்டர் வைத்து ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பான முறையில் எப்படி முதலீடு செய்வது என்றும் விசாரித்து அறிகின்றனர்.
நடிகை திரிஷா கூறும்போது எனது பண விவகாரங்களை என் அம்மா பார்த்துக் கொள்கிறார். எதில் முதலீடு செய்வது என்பதையும் கவனமாக முடிவு செய்கிறோம். சேமிப்பு என்பது முக்கியத்துவம் அப்போதுதான் வரும் காலத்தில் இதுபோன்று வாழ முடியும் என்றார்.
நடிகை சினேகா சமீபத்தில் தனது திருமண மண்டபத்தை விற்றார். திருமண செலவுக்காக அதை விற்றதாக கூறப்பட்டது. ஆனால் சினேகா அதை மறுத்தார். வேறு காரணத்துக்காக விற்றேன் என்றார். நமீதா சம்பாத்தியம் முழுவதையும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்.
அடுக்குமாடி வீடுகள் கட்டியும் விற்கிறார். கணக்கு விவகாரங்களை ஆடிட்டர் வைத்து கவனித்து கொள்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக