//]]>3

புதன், 30 மே, 2012

யாழ் மீனவர் கடலுக்குச் செல்ல பாஸ் நடைமுறை


யாழ்ப்பாணம் மாதகல் கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல பாஸ் அனுமதியைப் பெற வேண்டும் என கடற்படையினர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் அறிவிப்பால் தொழிலுக்குச் செல்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக மாதகல் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பாஸ் அனுமதியைப் பெறுவதற்கு மீனவரின் புகைப்படங்கள், அவர்களின் விவரங்கள், கடற்றொழில் உபகரணங்களின் விவரங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டுமென கடற்படையினர் கட்டளையிட்டுள்ளனர்.
இதனால் கடலுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலையிலுள்ளதாக மாதகல் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக