//]]>3

புதன், 30 மே, 2012

88 இலங்கை தமிழர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணம்.


இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலரைக் கொண்ட மற்றுமொரு அகதிகள் படகொன்று ஆட்கடத்தல்காரர்கள் பிடியில் சிக்காதுஅவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் 88 இலங்கைத் தமிழ் அகதிகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த படகு விரைவில் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை வந்தடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா, அதிகளவான இளைஞர்கள் படகில் இருப்பதாகக் கூறியுள்ளது.
இவர்கள் மீன்பிடி படகில் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்வதாக தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தமாக 211 புகலிடக் கோரிக்கையாளர்களே அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.
ஆயினும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 586 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக