//]]>3

செவ்வாய், 17 ஜூலை, 2012

மூர் வீதியில் கைக்குண்டுகள் மீட்பு

மன்னார் மூர் வீதி காட்டுப்பள்ளிவாசல் பகுதிக்குப் பின் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குப் பின்புறமாக உள்ள மலசல கூடத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைக்குண்டுகளை நேற்று திங்கட்கிழமை காலை முருங்கன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


முருங்கன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து விரைந்து சென்ற பொலிஸார, அப்பகுதியில் உள்ள மலசலகூடத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைக்குண்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸாரும், புலனாய்வுத் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக