//]]>3

செவ்வாய், 17 ஜூலை, 2012

இராணுவ மயமாக மாறும் வவுனியா


எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வவுனியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இவரின் விஜயத்தை முன்னிட்டு வவுனியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற போர்வையில் இராணுவ கெடுபிடிகள் ஆரம்பமாகியுள்ளன.. 

மஹிந்த ராஜபக்ஷ வவுனியா அரச செயலகத்தில் நடைபெறவுள்ள வவுனியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளார். இவருடன் சில அமைச்சர்களும் வருகை தரவுள்ளனர். 

இவரின் வருகையையொட்டி பாதுகாப்புப் படையினர் வவுனியாவில் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளனர். இரவு வேளைகளில் ரோந்து செல்லும் படையினர் சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

அத்துடன் வீதிகளில் ஆங்காங்கே வீதித் தடைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு சோதனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக