//]]>3

வெள்ளி, 18 மே, 2012

பொன்சேகாவிற்கு விடுதலையாம்


முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது.


2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, இராணுவத்திலிருந்து தப்பி சென்ற வீரர்களை தங்கவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.



இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து ஒரு மில்லியன் ரூபா ரொக்கப் பிணையிலும் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் அவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. அத்துடன், பொன்சேகாவின் கடவுச்சீட்டினைப் பறிமுதல் செய்யவும் தேவைப்படுமிடத்து அதனை மீளவும் பெற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக