//]]>3

வியாழன், 10 மே, 2012

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்


வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்கள் சிலவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சுங்கத் திணைக்கள விசேட தேடுதல் பிரிவு நடத்திய சோதனை நடவடிக்கையில் இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சனத் பெனாண்டோ தெரிவித்தார். தாய்லாந்து, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து குறித்த பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனுள் சிகரெட், பீடி, புகையிலை, கஜு உள்ளிட்ட பல பொருட்கள் அடங்குவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக