//]]>3

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

கிளிநொச்சி இளைஞனிட் 10 பாஸ்போட்



கிளிநொச்சியைச் சேர்ந்த 22 வயதான இளைஞரொருவரை, பத்து கடவுச்சீட்டுக்களுடன் சிலாபம் நகரில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகக் கூறி, பல்வேறு நபர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டுகளும் ஜெர்மன் நாட்டிற்கான ஐந்து விமான பயணச்சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

2 கருத்துகள்: