எம்பிலிப்பிட்டி, கல்மில்லஆர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக் கைக்குண்டு வீச்சு சம்பவம் நேற்று இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது காயமடைந்த 9 பேர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் 8 பேர் ஆண்கள் எனவும் இருவர் பெண்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக