//]]>3

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

2 விபத்து 2 மரணம்



புசல்லாவ மற்றும் அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வேறுபட்ட வாகன விபத்து சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

நுவரெலியா, கம்பொலை பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் கப் வண்டி ஒன்றும் மோதுண்டதில் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இச்சம்பவத்தில் காயமடைந்த 11 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 

கப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நாவலபிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

இதேவேளை கொழும்பிலிருந்து காலி நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் விபத்துக்கு இலக்காகியுள்ளார். 

இச்சம்பவத்தில் 22 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக