நித்தியானந்தா தன் அடுத்த முயற்சியாக ஆனந்தம் என்ற பெயரில் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார். மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற சர்ச்சை ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க மறுபுறம் தன் ஆன்மிக சீடர்களை குஷிப்படுத்த நித்யானந்தா தயாராகி வருகிறார்.
ஆன்மிக தகவல்கள் அடங்கியதாக அந்த அலைவரிசை அமையவுள்ளது. அதற்கான உறுதிப்பத்திரம் பெற்றுள்ள நிலையில் விரைவில் பரீட்சார்த்த ஒளிபரப்பு தொடங்க உள்ளது.
'எதிர்வரும் ஜனவரியில் ஆனந்தம் ஒளிபரப்பு தொடங்கும். அதற்கான வேலைகள் நடக்கின்றன. நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆன்மிக அன்பர்களுக்கு விருந்தாக இருக்கும்" என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். ___
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக