//]]>3

வியாழன், 12 ஏப்ரல், 2012

மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை



நேற்று (11) மாலை ஏற்பட்ட சுனாமி பீதியை அடுத்து மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்த நீர்கொழும்பு மீனவர்கள் இன்றும் (12) மீன்பிடி நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளனர். 

சுனாமி வரும் என்ற அச்சத்தில் நேற்று மாலை தமது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்றதாகவும் அதனால் இன்று காலை மீன்பிடிக்கச் செல்ல படகுகளை தயார் செய்ய முடியவில்லை எனவும் நீர் கொழும்பு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஒருநாள் மற்றும் நீண்டநாள் மீன்பிடியாளர்கள் என எவரும் இன்று நீர்கொழும்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக