//]]>3

வெள்ளி, 13 ஜூலை, 2012

அவுஸ்திரேலியக் கனவு! மேலும் 41 பேர் திருமலையில் கைது



அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து அகதிகளாகச் செல்லுபவர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முற்பட்ட 41 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பகல் வேளையில் மீன்பிடி படகில் திருகோணமலை கடற்பரப்பின் ஊடாக செல்ல முற்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பெண்களும் ஐந்து சிறுவர்களும் அடங்குவர்.
கைதானவர்கள் விசாரணையின் பொருட்டு திருகோணமலை துறைமுகப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக