//]]>3

வெள்ளி, 13 ஜூலை, 2012

வில்லியாக : ரம்யா


அருண் விஜய்யுடன் ‘தடையற தாக்க’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ரம்யா. ‘கண்டுபிடி, கண்டுபிடி’ படத்தில் சீமான் ஜோடியாக நடிக்கிறார். பாலு மகேந்திரா இயக்கும் படமொன்றிலும் நடிக்கிறார்.

ரம்யாவுக்கு வில்லி வேடத்தில் நடிக்க ஆசையாம். இதுகுறித்து அவர் கூறும்போது, கதாநாயகியாக நடிப்பதற்கு சினிமாவில் நிறைய போட்டிகள் உள்ளது. அதையும் மீறி ஒரு படத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தாலும் அதை தக்க வைத்துக்கொள்ள அதிர்ஷ்டம் வேண்டும்.
என்னை பொறுத்தவரை குணசித்திர வேடத்தில் என் திறமையை காட்டுவேன். மாடலிங் துறையில் இருந்து டி.வி.க்கு வந்தேன். ‘இது ஒரு காதல் கதை’ தொடரில் நடித்தேன். பாராட்டுகள் குவிந்தது. அதை தொடர்ந்து கரு.பழனியப்பன் இயக்கிய ‘மந்திரப்புன்னகை’ படத்தில் கதாநாயகனின் சிறுவயது அம்மாவாக நடித்தேன். அதன் பிறகு நிறைய படவாய்ப்புகள் வந்தது.
‘தடையற தாக்க’ படத்தில் வில்லனை ஒரு ஆட்டு தொட்டியில் சந்திப்பது போன்று நடித்த காட்சியை பலரும் ரசித்தனர். ‘கண்டுபிடி கண்டுபிடி’ சஸ்பென்ஸ் திரில்லர் கதை. வில்லி வேடம் கொடுத்தாலும் கலக்குவேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக