//]]>3

வெள்ளி, 13 ஜூலை, 2012

நாடு பூராக 10,648 பேரைக் கைது செய்த பொலிஸார்!


நாடு முழுவதும் மேற்கொண்ட சுற்றி வளைப்புக்களில் இருந்து கடந்த 21 நாட்களுக்குள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 10,648 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ஹோஹண ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

கடந்த மாதம் 20ஆம் திகதி தொடக்கம் நேற்றைய தினம் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கண்டி பிரதேச பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 966 பேரும் அநுராதபுர பொலிஸாராது சுற்றிவளைப்பின் போது 762 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கல்கிசை பொலிஸாரது தேடுதலில் 497 பேரும் அம்பாறை 457 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக