//]]>3

திங்கள், 28 மே, 2012

மரணச் சனி நடக்கும் போது மடடாயம் மரணம்



ஒவ்வொரு மனிதனுக்கு‌ம் மூன்று அல்லது நான்கு முறை ஏழரைச் சனி வரும்.
முதல் தடவையாக ஏழரைச் சனி வருவதை மங்கு சனி என்று சொல்வார்கள், இரண்டாவது முறையாக வருவதை பொங்கு சனி என்று சொல்வார்கள். அதற்கடுத்து 3வது முறையாக வருவதை மரணச் சனி என்று சொல்வார்கள்.
மரணச் சனி நடைபெறும் போது மரணம் ஏற்படுமென பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், அது அப்படி கிடையாது. பிறக்கும் போது சனி பகவான் யோகாதிபதியாக இருந்தார் என்றால், 4வது சனியையும் கடந்தும் உயிர் வாழலாம்.
அதனால், 3வது சனியை மரணச் சனி என்று சொல்ல முடியாது. 3வது சனி சில இடையூறுகளைக் கொடுக்கும். சின்னச் சின்ன பொருள் இழப்புகள், சிறிய அளவில் மரண பயம் போன்றெல்லாம் இந்த போக்கு சனி கொடுக்கும்.
ஆணவத்தில் பறந்துக் கொண்டிருப்பவர்களை ஒரு தட்டு தட்டி அவர்களின் ஈகோவை குறைப்பதுதான் சனீஸ்வர பாகவானின் வேலை. இதுபோல சனி பகவான் மாறி மாறி தனது வேலையைச் செய்து கொண்டிருப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக