//]]>3

ஞாயிறு, 15 ஜூலை, 2012

2 அரை வருடத்தில் 2500 சிறுமிகள்மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள்


கடந்த இரண்டரை ஆண்டு காலப்பகுதியில் 2500 சிறுமிகள் மிகவும் மோசமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பெரும்பான்மையான சிறுமிகள் 16 வயதுக்கும் குறைவானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் இந்த சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

நாளொன்றுக்கு நான்கு சிறுமியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

உண்மையில் இதனை விடவும் அதிகளவான சிறுமிகள் பாலியல் ரீதியாக நாள்தோறும் துன்புறுத்தப்படுவதாகவும், பயம், வெட்கம், அச்சுறுத்தல், லஞ்சம் பெற்றுக்கொள்ளல், அறியாமை போன்ற பல்வேறு காரணிகளினால் இவ்வாறான சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை என பொலிஸார் தெரிவித்துளளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக