//]]>3

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்: யாழில் சம்பவம்



குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, 15 வயது பாடசாலைச் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை இன்று யாழ். கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமியைச் சந்தித்துள்ள சந்தேகநபர், அவருக்கு குளிர்பானம் அருந்தக் கொடுத்ததாகவும் அச்சிறுமி மயக்கமடைந்ததும் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகவும் சந்தேகநபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இணுவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதேடுதலின் போது, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார், யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக