//]]>3

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

பிரித்தானிய பா.உ-யாழ். இன்னும் இரு வருடங்களில் மேலும் வளரும்





யாழ். விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதிநிதி லோட் நஸ்பியும் அவரது துணைவியாரும் இன்று செவ்வாய்கிழமை காலை யாழ். மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலர் இமெல்டா சுகுமாரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

யாழ். மாவட்டச் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் பொருட்டு, சமூர்த்தி கிளை, மீள்குடியேற்றக் கிளை, திட்டமிடல் கிளை, நிதிக்கிளை, நிர்வாகக் கிளை மற்றும் புள்ளி விபரக் கிளை என்பனவற்றுக்கு சென்று பார்வையிட்டு அவைகளின் செயற்பாடுகள் தொடர்பில் இவர்கள் கேட்டறிந்துள்ளனர். 


யாழ்ப்பாணம் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து நேரில் பார்வையிட்டு பிரிட்டன் அரசுக்கு தெரியப்படுத்தும் நோக்கிலேயே தமது பயணம் அமைந்துள்ளதாக பிரித்தானிய பிரதிநிதி கருத்து தெரிவித்தார். 

அத்துடன் இன்னும் இரு ஆண்டுகளில் தற்போதுள்ள யாழ்ப்பாணம் மிகுந்த வளர்ச்சியைக் காணும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக