//]]>3

வியாழன், 12 ஜூலை, 2012

வேறு பெயரில் திருமணம் செய்துகொண்ட தேரர் சிக்கினார்


வேறு பெயரில் திருமணம் செய்துகொண்டமை, போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து வாகன அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டமை, போலி ஆவணங்களைத் தயாரித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வெல்லவ ஹிரிபிட்டியே தர்மசந்திர பிரிவெனாவிலுள்ள தேரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவியணிந்து திரியும் 40 வயதான இந்தத் தேரர், சாதாரண உடையணிந்து மனைவியைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தர்ப்பத்தில் பிரதேச மக்களினால் சிறைபிடிக்கப்பட்டு வெல்லவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து மல்வத்து சங்க சபையில் இடம்பெற்ற விசாரணைகளின் போது போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து அதிலிருந்து இந்தத் தேரர் விடுதலையாகியுள்ளதாகவும் வெல்லவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக