//]]>3

வியாழன், 12 ஜூலை, 2012

மாணவனுக்கு பிரம்படி


சேலத்தில் ஹோலி கிராஸ் என்ற பெயரில் தனியார் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் பிளஸ் 2-வரையிலான பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பள்ளிக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக ஷூ அணிந்து வரவேண்டும் என்பது விதிமுறை. இந்நிலையில் இன்று இப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் அர்ஜூன் என்ற மாணவன் பள்ளிக்கு ஷூ அணியாமல் வந்துள்ளான்.
இதையறிந்த தலைமையாசிரியர் ஞானசேகரன் அவனை அழைத்து கண்டித்ததோடு அல்லாமல், பிரம்பால் அடித்துள்ளார். இதனால் காயமடைந்த அர்ஜூன் மாலை வீடு திரும்பியதும் பெற்றோர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
உடனே, காயமடைந்த அர்ஜுனை அவனது பெற்றோர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அர்ஜூனனின் பெற்றோர்கள் பிரம்பால் அடித்த தலைமையாசிரியர் ஞானசேகரன் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக