இலங்கை உள்ளிட்ட இந்து சமுத்திர வலயத்திற்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.
சுனாமி அனர்த்தம் சற்று முன்னர் தளர்த்தப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களமும் தெரிவித்துள்ளது. பாதுகாப்பான சூழ்நிலை தற்போது காணப்படுவதால் மக்கள் தமது இருப்பிடங்களுக்கு மீள திரும்ப முடியும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எச்.காரியவசம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக