//]]>3

புதன், 11 ஏப்ரல், 2012

நீர்வேலி, அத்தியடி பகுதியில் மதில்களை உடைத்து தனியார் பஸ்


யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மதில்களை உடைத்துக்கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் நீர்வேலி, அத்தியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மேற்படி பஸ் தனது வேகக்கட்டப்பாட்டை இழந்து வீடொன்றின் முன்பக்க சுவரை இடித்து தள்ளிக்கொண்டு உள்ளே சென்றுள்ளது.
இச்சம்பவத்தில் சேதவிபரங்கள் தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக