//]]>3

புதன், 11 ஏப்ரல், 2012

செவிப்பறை கிழித்த மாணவர்களுக்கு வகுப்புத் தடை




யாழ். பல்கலைக்கழக கனிஸ்ட மாணவனை பகிடிவதைக்கு உள்ளாக்கிய சிரேஸ்ட மாணவர்கள் மூவருக்கு யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து இடைநிறுத்தியுள்ளது. 

இதனை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் இன்று (11) புதன்கிழமை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. 

கடந்த மார்ச் 28 ஆம் திகதி யாழ்ப்ப்பாண பல்கலைக்கழக முதலாம் வருட கலைப்பீட மாணவனான தில்லைநாதன் தனராஜ் (வயது 22), சிரேஸ்ட மாணவர்களினால் பகிடிவதை செய்யப்பட்டு தாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ். பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களை வகுப்புத்தடை விதித்து இடைநிறுத்தியுள்ளது. 

யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக