//]]>3

புதன், 11 ஏப்ரல், 2012

சுனாமி எச்சரிக்கை எரிபொருளுக்கு மக்கள் திண்டாட்டம்






இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து கல்முனை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கு தேவையான எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்து நின்றனர். 

சுனாமி எச்சரிக்கையையடுத்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிங்கள புதுவருடத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆடைகள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டம் மின்னல் வேகத்தில் கலைந்து சென்றதன் காரணமாக நகர் பிரதேசத்திலுள்ள ஜவுளிக்ககைள் வெறிச்சோடிக்கிடப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. கடற்கரைப் பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களில் வசித்த மக்கள் பிரதான வீதிகளில் கூட்டம்கூட்டமாக நிற்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக