//]]>3

புதன், 11 ஏப்ரல், 2012

சுரங்க விபத்து: ஊழியர்களை மீட்கும் பணி தீவிரம்



பெரு நாட்டில் உள்ள கெப்சா நெக்ரா என்ற இடத்தில் கடந்த சில திகதிகளுக்கு முன்பு, செம்பு சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து சுரங்கத்தற்கு செல்லும் பாதை முழுவதும் மண்களால் மூடப்பட்டதால் ஊழியர்களை உடனடியாக மீட்க முடியவில்லை.
சுரங்கத்தில் சிக்கிய 9 பேரும் 7 திகதிகளாக இன்று வரை சுரங்கத்திற்குள்ளேயே இருக்கிறார்கள்.
அவர்களை மீட்பதற்கு இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. இருப்பினும் குழாய் மூலம் ஓக்சிஜன் வாயு செலுத்தப்படுகிறது. மேலும் உணவு, தண்ணீர் போன்றவையும் குழாய் மூலம் செலுத்தி வருகிறார்கள்.
தகவல் தொடர்பு சாதனம் செயற்படுகின்றன. அதன் மூலம் 9 பேரும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களை மீட்பது குறித்த தொழில் நுட்ப ரீதியாக ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.

இதுபற்றி பெரு நாட்டு மந்திரி பெட்ரா, 9 பேரையும் நாங்கள் எப்படியாவது மீட்டு விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு பெரு நாட்டில் இதே போன்ற ஒரு சுரங்கத்தில் 33 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் 69 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக