//]]>3

புதன், 18 ஏப்ரல், 2012

சீனா முழுவதையும் அழிக்க புதிய ஆயுதம்



இந்தியா தயாரித்துள்ள 5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி V ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இன்று சோதிக்கப்படுகிறது. 

இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றால் அது இந்திய படையினருக்கு பெரும் பலமாக அமையும். காரணம், இந்த ஏவுகணையால் சீனா முழுவதையும் நமது ஏவுகணையின் தாக்குதல் வளையத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5000 கிலோமீட்டர் தூரம் வரை இது பாயக் கூடியது. அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலக அளவில் ஐந்து நாடுகள்தான் வைத்துள்ளன. அவை -அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவை. 

அக்னி V ஏவுகணையின் மூலம் சீனா முழுவதையும் நமது தாக்குதல் இலக்குக்குள் கொண்டு வர முடியும். அத்தோடு நில்லாமல், ஐரோப்பாவின் பல நாடுகளையும் கூட நம்மால் தாக்க முடியும். 

ஒரிசா மாநிலம் சண்டிப்பூர் பாதுகாப்புத் தளப் பகுதியிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவு ஏவுதளத்தில் இருந்து அக்னி V ஏவுகணை இன்று மாலை 7 மணிக்கு சோதனை செய்யப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக