//]]>3

புதன், 18 ஏப்ரல், 2012

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது



நிறைவுற்ற இவ்வருடத்தின் மார்ச் மாதத்துடன் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 260,000 தாண்டியுள்ளது. 


மார்ச் மாதத்தில் மாத்திரம் 91,102 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 



இது கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 21.3% வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகளின் தொகை அதிகரித்துள்ளதென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »