//]]>3

புதன், 18 ஏப்ரல், 2012

வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் பலி

வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் பலி


அநுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இன்று (19) காலை இடம்பெற்ற வான் விபத்தொன்றில் சிக்கி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தகத்துறை பணிப்பாளர் நூரானியா ஹசன் என்பவர் உயிரிழந்துள்ளார். 

இவ்விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வான் ஒன்றும் லொறியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் வானில் பயணித்த ஐவரும் லொறியின் சாரதியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக