மத்திய மலைநாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் சீரற்ற காலநிலையை அடுத்து மேல்கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவுகளை திறக்க அதன் பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (17) செவ்வாய்க்கிழமைக் காலை திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவிப் பணிப்பாளர் ஹெரந்தன ஹேமவர்த்தன தெரிவித்தார்.
வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் கீழ் பகுதிகளில் கொத்மலை ஓயாவை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக