பலஸ்தீன ஜனாதிபதி முஹம்மர் அப்பாஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றிரவு கொழும்பு வந்தடைந்தார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவரை விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார். சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன தலைமையிலான குழுவினரும் இதில் கலந்துகொண்டனர்.
இலங்கை வந்துள்ள பலஸ்தீன ஜனாதிபதி - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
சுதந்திர அரசாக மாற்றமடைய பலஸ்தீனம் இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை பலஸ்தீனத்துடன் நெருங்கிய உறவுகளை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக