//]]>3

திங்கள், 16 ஏப்ரல், 2012

வலி. வடக்கு மீள்குடியேற்றம்




வலிகாமம் வடக்கு பகுதியில் பொதுமக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் விஷேட கலந்துரையாடலொன்று இன்றையதினம் (15) வசாவிளான் மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. 


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முன்னிலையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது வலி வடக்குப் பகுதியில் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படாத மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் ஏற்கனவே மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் தேவைகள் தெடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


இதன்போது பல்வேறு விடயங்களை அவதானத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


இக் கலந்துரையாடலில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு.ஸ்ரீ.மோகனன் அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக