//]]>3

திங்கள், 16 ஏப்ரல், 2012

மூன்று மாதங்களில் 43 டெங்கு மரணங்கள்



இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த மூன்று மாத காலத்தில் 9657 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நோயாளர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். 

ஜனவரி மாதத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 

மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதால் டெங்கு நுளம்பு பரவாத வண்ணம் சூழலை பாதுகாக்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக