//]]>3

வெள்ளி, 22 ஜூன், 2012

விடுதலைப் புலிகளின் ஆயுதம் தயாரிக்கும் உத்தி


போரின் பின்னரான தேடுதலில் பல ஆயுத தொகுதிகள் மீட்கப்பட்டு வருவதாக தெரிவித்து வரும் சிறிலங்கா இராணுவம், மீண்டும் ஒரு தொகுதியை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது.

இதுவரை கண்டுப்பிடிக்கப்படாத விடுதலைப்புலிகள் தயாரித்திருந்த 25 குண்டுகள் உட்பட ஆயுதங்களை தாம் மீட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.   முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் நடத்தப்பட்ட தேடுதல்களில், இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவை, குண்டு இறக்குமதி செய்யப்படும் பெட்டியில் வைக்கப்பட்டு, புதைக்கப்பட்டிருந்தன.
இதனை தவிர, 10 கிளைமோர் குண்டுகள், 83 அமுக்க வெடிக்கள்,  13 பொறிவெடிகள், 18 டொபிடோக்கள், 79, 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் என்பன மீட்கப்பட்டதாகவும் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக